Saturday, June 26, 2004

sms குழப்பம்..??!!!

அதென்னமோ தெரியலைங்க ஒரு 2 -3 வாரமா எனக்கு வர்ற sms (இதுக்கு தமிழ்ச்சொல் என்னான்னு யாரவது வெவரமானவங்க சொல்லுங்கய்யா.. நான் பாட்டுக்கு எதாவது சொல்லி அது ஒரு பிரச்சனைய கிளப்பிட போகுது..)எல்லாம் கல்யாணம், காதல்ன்னு ஒரு ரேஞ்சாவே வருது..

உதாரணமா..

காதல் கல்யாணம் நல்லதா? இல்லை வீட்டுல பார்த்து வைக்கிற கல்யாணம் நல்லதா??? -- ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.. ஒண்னு தற்க்கொலை. இன்னொண்னு கொலை...அவ்ளோதான்'

ஜோசியர்: உனக்கு ஒரே ஒரு தோஷம் இருக்கு, கல்யாணம் பண்னினா அந்த தோஷம் போய்டும்.. ராசா:அதென்னங்க தோஷம்...ஜோசியர்: வேறென்ன சந்தோஷம் தான்...

இந்த மாதிரி தினம் 3-4 மெஸ்ஸேஜ் வருதுங்க.. இதென்ன தென்மேற்க்குபருவமழை மாதிரி எதாவது கல்யாணமெஸ்ஸேஜ்மழை சீசனா???

இப்பத்தான் எங்க அய்யா 'உனக்கும் கழுதை வயசு ஆகுது.. ஒரு பொண்னு பாத்துரலாமா தம்பி? கூடமாட தோட்டத்துல வேலைக்கும் ஒரு ஆளு ஆகுமில்ல'ன்னு கேக்க ஆரம்பிச்சிருகாரு.. அதை எப்படியோ மோப்பம் புடிச்ச மாதிரி எல்லாப்பயலும் தமாசுங்கிற பேருல ரவும்பகலும் இந்த மாதிரியே மெஸ்ஸேஜ் அனுப்பி குழப்புறானுக.... (இந்த மாதிரி நேரத்தில தான் ஏன்டா இந்த Aircellக்காரங்க மெஸ்ஸேஜ் ஃப்ரீயா குடுக்கிறாங்கன்னு தோணும்). நாம ஏற்க்கனவே ஒரு பெரிய குழப்பவாதி.. மொத்தத்தில... எப்பவும் போல...'ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'



4 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

SMS =குறுந்தகவல்

Pavals said...

நன்றி நண்பரே!!...

குசும்பன் said...

vikatan'la sonnAngO
SMS - Sirippu MamE sirippu

Unknown said...

SMS - குறுஞ்செய்தி. நம்ம ஈழநாதன் சொல்ற மாதிரியும் சொல்லலாம்/