Thursday, September 16, 2004

கேள்வி மேல கேள்வி

இந்த நிமிஷம் உலகத்தோட மொத்த மக்கள்தொகை எவ்வளவு?
இந்த வருஷம் இதுவரைக்கும் உலகத்தில எத்தனை குழந்தைக பிறந்திருக்கு? இன்னைக்கு மட்டும் எவ்வளவு?
பிறப்பு மாதிரியே இறப்பு எவ்வளவு?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எத்தனை ஹெக்ட்டேர் காடுகளை அழிச்சிருக்கோம்?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எத்தனை டன் மீன் புடிச்சிருக்கோம்?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எவ்வளவு புஸ்த்தகம் பதிப்பாயிருக்கு?
இந்த வருஷம் இந்த நிமிஷம் வரைக்கும் எத்தனை கார் தயாரிச்சிருக்காங்க? அதே மாதிரி எத்தனை சைக்கிள்?
இந்த நிமிஷம் பூமியோட எடை என்ன?

(போதும்டா டேய்!!)

-என்னடா இவன் திடீர்ன்னு கணக்கு வழக்கெல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டான், அமாவாசை ஏதும் பக்கத்துல வருதான்னு யோசிக்கரீங்களா? அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க, (நான் கணக்கு வழக்கு கேட்டு அதுனால நம்ம தமிழ்நாட்டுல எதாவது அரசியல் மாற்றமா வரப்போகுது.. சும்மா பொழுது போகாம கேக்குறது தான, அதுனால மன்னிச்சு விட்ருங்க)
நான் மேல கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் வேணுமின்னா www.worldometers.info ந்னு ஒரு இணயதளம் இருக்கு அங்க போய் பாத்துக்கோங்க..நான் கேட்டிருக்கிற கேள்விக மட்டுமில்லை இன்னும் நிறையா கேள்விகளுக்கு புள்ளிவிவரமா பதில் சொல்லியிருக்காங்க..(இந்த டெக்னிக்கல் ஜிகிடிக்காரங்க செய்யுற ரவுசு தாங்க முடியலைங்க)

ஒரு புலம்பல்:

விநாயகருக்கு பிறந்தநாள் வருதாமா.. நம்ம சகாக்கள் எல்லாரும் அவுங்க அவுங்க ஆபீஸ் தொடர்ந்தாப்புல ரெண்டு நாள் லீவுன்னு சந்தோஷமா இருக்கிறாங்க.. நமக்கு அப்படியா..ரெண்டு மூனு வருஷம் கழிச்சு வாய்க்கால்ல தண்ணி வருது.. ராவும் பகலுமமா நமக்கு இங்க வேலை பெண்டு நிமுத்துது.. இதுக்கு நடுவால இங்க பதிவு பக்கம் வந்து இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டு உங்க அரிவையெல்லாம் பெருக்க வேண்டியது இருக்கு(!)... என்னத்த சொல்றதுங்க, வர வர நமக்கு சமுதாய கடமைக ஜாஸ்த்தியாயிட்டே இருக்குது போங்க..

எல்லாரும் சந்தோஷமா இருங்கப்பா,, (இந்த விநாயகர் சதுர்த்தி, டிசம்பர் 6, இந்த தேதியெல்லாம் வந்தாலே நமக்கு வயித்த கலக்குதுங்க)
முதல் வசந்தம் படத்துல குங்ககுமபொட்டு கவுண்டர் சொல்ற மாதிரி "சந்தோசமாவும் இருந்துக்கோ, அதே நேரம் சாக்கிரதையாவும் இருந்தக்க கண்ணு".....

2 comments:

Kasi Arumugam said...

ஓஹோ, இந்த வருஷம் வாய்க்கால்ல தண்ணி வருதா, ஜாலிதான். வெளுத்துவாங்குங்க.

Pavals said...

நிசமாலுமே, வாய்க்கால்ல தான் தண்ணி விட்ருக்காங்கண்ணோவ்...