Friday, November 19, 2004

பதில் பதிவு.

என்னோட முந்தய ஒரே கேள்வி பதிவுக்கு
பின்னுட்டம் குடுக்கிற விதமா 'சீமாச்சு' மரத்தடியில ஒரு மடல் போட்டிருந்தாருங்க.
அதை வழிமொழிஞ்சு 'ஜெயஸ்ரீ'யும் ஒரு மடல் போட்டிருந்தாங்க...

அவரோட பின்னுட்டத்துக்கு பதில் சொல்ல இந்த பதிவு..

----

சீமாச்சு சார்..

நீங்க சொன்ன மாதிரி
//இந்த நான்கு காட்சிகளிலுமே "அந்த கேள்வி" யாருக்கும் தவறாகப் படவில்லை.//

ஆனால் எனக்கு மட்டும் ஏன் பட்டுதுங்கரீங்க?? நீங்க சொன்ன நிகழ்ச்சியும் நான் சொன்ன நிகழ்ச்சியும் ஒரே தர வரிசைதாங்கரீங்களா?

//வன்மத்தையும் இத்தனை நாளாக அடை காத்து இன்று வலைப் பதிவில் குஞ்சு பொரித்திருக்கிறார்//

இப்படியெல்லாம் நீங்க நினைக்கவே வேண்டியதில்லை..

பாவம், நிறைய பேரு (எங்கம்மா உட்பட!) அவர் 'இந்து மதத்தின் தலைவர்'ன்னு நினைக்கிறாங்க அந்த மாதிரி ஆளுகளுக்கு வெணுமின்னா அவர் இப்படி கேட்டது தப்பா பட்டிருக்கலாம்.. சாமி சத்தியமா எனக்கும் அது தப்பா படலைங்க..

எல்லா உயிரனங்களையும் 'நம்மவாளா' நினைக்கிறதுக்கு ஜெயெந்திரர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மொத்த தலைவரோ, இல்லை பெரிய மக்கள் தலைவரோ கிடையாது, அவர் 'நம்மவளோட' ஒரு பெரிய, முக்கிய பிரதிநிதிங்கிறது எனக்கு புரியுது.. சும்மா எனக்கு ஏற்ப்பட்ட ஒரு அனுபவத்தை சொன்னனுங்க அவ்வளவுதான்.. மத்தபடி எனக்கு சம்பந்தமில்லாத வேறொரு துறைத்தலவரோட நடவடிக்கை பத்தியெல்லாம் நான் தப்பா பேசரதில்லீங்க..

எல்லாம் சாதிக்காரங்களும் மதத்துக்காரங்களும் தான் வேளாங்கன்னிக்கும், ஏர்வாடிக்கும் போறாங்க, ஆனாலும் அதெல்லாம் ஒரு பிரிவுக்காரங்களோட இடம் தான, அந்த மாதிரித்தான் 'காஞ்சிமடமும்'ங்கிறது எனக்கு தெளிவா இருக்கிறதுனால கண்டிப்பா, அவர் கேட்ட அந்த கேள்வி மேல எந்த வன்மமும் இல்லைங்க..

அப்புறம் ஜெயஸ்ரீ மேடம்..

//செக்ஷன் 302-வரை போயிருக்கிறார். அவரைப்பற்றி இப்போதுதான் தம்மாத்தூண்டெல்லம் எடுத்துப்போட்டு சந்திலே சிந்து பாடுகிறது மொத்த இணையமும் //

யாரு சந்தில சிந்து பாடுறாங்கன்னு எனக்கு தெரியலைங்க..நான் கண்டிப்பா பாடுல.. அப்படி நான் சந்துல சிந்து பாடி அதுனால அவருக்கு ஒன்னும் ஆகப்போறதில்லைங்க.. எதோ திடீர்ன்னு எங்காவது பஸ்ஸுல போகும் போது FM ரேடியோவுல "செனோரீட்டா"ன்னு "ஜானி"ப்படபாட்டு போட்டா உடனே நமக்கு எப்பவோ பார்த்த அந்த படத்துல டைட்க்ளோசப்ஷாட்டுல தலையில முக்காடோட தீபா சிரிக்கிற அந்த காட்சி ஞாபகத்துக்கு வருமே (ஒரு வேளை ரஜினிராம்கி மாதிரி ஆளுகளுக்கு அவங்க தலைவர் ஸ்டைலா பைப் புடிக்கிறது கூட ஞாபகம் வரலாம்). அந்த மாதிரி எல்லாரும் 'ஜெயேந்திரர்'ன்னு பேசும்போது நமக்கும் அவருக்குமான அந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்துச்சுங்க.. எழுதிட்டன் அவ்ளோதாங்க.. அதுல வேற எந்தமாதிரி உள்ளர்த்தமும் கிடையாதுங்க..

//அவர் கொடுத்திருந்த பில்ட்-அப் பார்த்து நான் கூட, ஏதோ 'ஏன் இவர்களை உள்ளே வீட்டீர்கள்?' ரேஞ்சுக்கு ஏதோ சொல்லிவிட்டாரோ என்று ரொம்பத்தான் எதிர்பார்த்துவிட்டேன்.//

இதை எனக்கு கிடைச்ச பாராட்டா எடுத்தக்கறனுங்க.. (டேய் ராசா.. கடைசி வரைக்கும் எதிர்பார்ப்போட படிக்கிற மாதிரி எழுதறளவுக்கு பெரிய ஆளாகிட்ட..ம்ம்.. கலக்கற போ!!)

கலக்கீட்ட கண்ணு!!


(இந்த பதிவை மரத்தடி குழுமத்திலும் பொது மடலா போட்டிருக்கேன்..)

No comments: