Saturday, November 20, 2004

என் ஆசை மைதிலியே..

தீபாவளி முடிஞ்சு ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு, இன்னும் தீபாவளி ரிலீஸ் படம் இன்னும் ஒன்னுங்கூட பார்க்காம இருந்தா, அப்புறம் சாமி கண்ண குத்திருமேன்னு, நேத்து எதாவது ஒரு படத்துக்கு போறதுன்னு முடிவு செஞ்சு பொதுக்குழுவ கூட்டினதுல, நம்ம சகாக்கள் மத்தியில அட்டகாசம், ட்ரீம்ஸ்'ன்னு ஒவ்வொரு படமா கழிச்சு கடைசியில 'மன்மதன்' போலாம்னு முடிவு ஆச்சு.. (எல்லாரும் சாமியார் சமாச்சாரத்துல பிசியா இருக்கிறதுனால, விமர்சனம் எழுதாம விட்டுடாங்க போல, அதான் எங்களுக்கு குழப்பமாகிபோச்சுங்க)

சரி இதுவரைக்கும் நம்ம லிட்டில் சூப்பர்ஸ்டார வெள்ளித்திரையில பார்த்ததே இல்லை, முதன் முதல்ல ஒரு முயற்சி செஞ்சிருவோம்னு நானும் தலையாட்டிட்டு, அடிக்கிற குளிருல, கொட்டுர பனியில, ரெண்டாவது ஆட்டம் கிளம்பிபோயிட்டனுங்க (உங்க ஊரு என்னடா குளிரு, இங்க அமேரிக்காவுல, லண்டன்ல இல்லாத குளிரா'ன்னு கேக்காதீங்க, நமக்கு தெரிஞ்சது, நம்ம ஊரு மார்கழி பனிதாங்க).
நல்ல வேளை நாங்க ஒரு நாலு பேரா போனோம்ங்க, எங்க ஊருலயே அதிக சீட் இருக்கிற ATSC தியேட்டருல படம் போட்டிருந்தாங்களா, தனியா போயிருந்தா தியேட்டருல பயமா இருந்திருக்கும்.. அவ்ளோ கூட்டம்ங்க.

நீ படத்துக்கு போன கதைய விட்டுட்டு. படத்தை பத்தி சொல்லுங்கரீங்களா, அதுக்கு தான வர்றேன் அவசரப்படாதீங்க.
D:\manmd

படத்தோட கதையெல்லாம் எல்லாரும் இணையத்துல சுத்துர பல இழைகள்ல படிச்சிருப்பீங்க, அதுனால நானும் நீட்டி முழக்க வேண்டாம்னு நினைக்கிறனுங்க. கொஞ்சம் சிவப்பு ரோஜக்கள் கதை மாதிரி இருந்தாலும், கடைசியில ஒரு எதிர்பாராத முடிச்சு வச்சிருக்காங்க, அது கொஞ்சம் புதுமாதிரியா தாங்க இருந்துச்சு.

ரஜினி படம் பார்க்கிர மாதிரி முதல்ல இருந்து கடைசி வரை சிம்பு, சிம்பு சிம்பு மட்டுமே.. முதல் அரை மணி நேரத்துக்கு அவர் வர்ற எல்லா காட்சியுமே அறிமுக காட்சி மாதிரி கால் தனியா, கை தனியா, பின்னாடி கொஞ்சம்ன்னு பில்டப்புலயே காட்டுனதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் (மத்த படத்துக்கு இது பரவாயில்லைன்னு சொன்னாங்க).எங்கூட வந்த சகா ஒருத்தன் 'சிம்பு நடிச்சு இதுவரைக்கும் வந்த படத்துல இது தான் ஒரளவுக்காது தேறுது'ன்னு சொன்னான்.
ஆனா எனக்கென்னமோ சிம்பு இந்த இயக்கம், திரைக்கதைக்கெல்லாம் இன்னும் பக்குவப்படலைன்னு தாங்க தோணுது. அதுவும் நிறையா காட்ச்சிகள்ல அவர் தான் சொல்ல நினைச்சதா முழுசா காட்சியா காமிக்காம, திரையிலயும் நம்ம முன்னாடி உக்காந்து கதை சொல்ற மாதிரியே சொல்லியிருக்கிறது, என்னவோ ரேடியோ நாடகம் கேக்குற மாதிரி இருந்துச்சுங்க.. (கொஞ்சம்) வலுவான கதைத்தளத்தை கையில வச்சுகிட்டு அதுக்கு இப்படி வலுவில்லாத திரைக்கதைய செஞ்சது தான் தப்பு.
அதுல்குல்கர்னி, கவுண்டமனி, மந்திராபேடி'ன்னு பெரிய நட்சத்திர பட்டளத்தை சுத்தமா வீணடிச்சிருக்காங்க. (அதுல்குல்கர்னி மாதிரியான ஒரு கலைஞனை இப்படி வெட்டியா உலாவவிட்டது நினைக்கும் போது..நற..நற)

சரி.. சும்மா எதுக்கு குத்தமே சொல்லிட்டு. நல்லதா சொல்லவும் நாலு விஷயம் இல்லமாலா போச்சு. குறிப்பா யுவன்சங்கர்ராஜா'வொட பின்னனி இசை, அதுதான் rd.ராஜசேகரோட கேமிராவும் தான் படத்தை இழுத்துட்டு போற முக்கியமான குதிரைக. (ஆமா, யுவனுக்கு பின்னனி இசை செஞ்சு குடுக்கிறது கார்த்திராஜா'ன்னு சொல்ராங்களே, அது உண்மையா?).
அப்புறம் ஜோதிகா.. துளியூண்டு பொண்ணா மேக்கபெல்லாம் இல்லாம கலக்கறாங்க, இந்த மேட்டர இதோட நிறுத்திக்கிறனுங்க, எப்படியும் மீனாக்ஸ் இதை பத்தி சொல்லுவாரு அப்ப பார்த்துக்கோங்க.

முதல் பாதியில நாம படுற அவஸ்த்தைய புரிஞ்சுகிட்டோ என்னவோ ரெண்டாவது பாதியில கொஞ்ச நேரம் வந்தாலும் நம்ம சகலைரகளை 'சந்தானம்' பட்டைய கிளப்பிட்டு போறாருங்க. அவர் சிம்புவ பார்த்து "குணா கமல் மாதிரி இருந்துட்டு சிவப்பு ரோஜாக்கள் கமல் வேலையெல்லாம் செய்யிறயே"ன்னு சொல்ற வசனம், எதோ படத்தோட கதைய பத்தி 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை'ன்ன சொல்ற மாதிரி பட்டுதுங்க.

'என் ஆசை மைதிலியே..' பாட்டு சும்மா ஆட வைக்கிற ரகம். என்ன செய்யிறது, உள்ளூரு, அதுவும் நமக்கு தெரிஞ்ச தியேட்டரா வேற போச்சுங்களா, கைய கால கட்டிகிட்டு அமைதியா உக்காந்திருந்தனுங்க.

மொத்ததுல மேல போட்டிருக்கிற படத்துல சிம்பு உக்காந்திருக்கிறாரே அதே மாதிரி தான் நான் உக்காந்திருந்தேன், படம் பூராவும். (ஜோதிகா வர்ற சீன் தவிர:-)..). படம் போன போக்கு மட்டும் அதுக்கு காரணமில்நலைங்க, தியேட்டரோட ஆடியோ சிஸ்ட்டமும் கொஞ்சம் அப்படித்தான்.. (கேட்டா, இப்பத்தான் ரெண்டு வருஷம் முன்னாடி DTS செஞ்சோம்ங்கிறாங்க..).

"வீட்டுல ஆயிரஞ்சோலி கிடக்குது எல்லாத்தையும் விட்டுட்டு துரை ரெண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு போயிட்டியா"ன்னு எங்கய்யன் காலையில பாட்டு ஆராம்பிப்பாரு, அதுக்கு அதே மாதிரி உக்காந்திர வேண்டியதுதான்..

3 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

interesting review.is it a failure, commercially.i read reviews in vikatan and the hindu.after reading yours i get a better idea and so may avoid seeing it.there was lot og hype about the film.i think that has had a negative impact as the final product is not up to the
mark.you write well.you can send this review to an ezine.

மீனாக்ஸ் | Meenaks said...

வாழ்க வளமுடன் :-)

இங்கே பெங்களூரில் படம் ரிலீஸ் செய்யாமல் தாலியறுத்துத் தொலைக்கிறார்கள். நான் என்ன பண்ணுவேன், என் தேவதையைப் பார்க்காமல் துக்கமில்லை..!! (பார்த்தாலும் தூக்கமிருக்காது, அது வேற விசயம்!!

Unknown said...

மீனாக்ஸ், நேத்து சண்டிவி திரைவிமர்சனத்திலே "என் ஆசை மைதிலியே" பாட்டு போட்டாங்க. நம்ம சோதிகா அம்மணி செம்ம குத்தாட்டம் போட்டுருக்காங்க, அதுக்காகவாவது படத்தப் பாக்கணும். மந்த்ராபேடி வேற இருக்காங்களாம்ல...