Saturday, April 9, 2005

மழையும் யானையும் பின்னே 'நேத்ரா'வும்..

ஊருபக்கம் நல்ல மழைங்க.. ஒரு மாசத்துக்கு தண்ணி வாங்கி ஊத்த வேண்டாம்ங்கிற அளவுக்கு தட்டிஎடுத்துட்டு போயிருக்குதுங்க, அதுக்குள்ள இந்த வேசை முடிஞ்சிரும்னு ஒரு நம்பிக்கை, இல்லாட்டி பழையபடி தண்ணி லோடு அடிக்கவேண்டியதுதான்...

பொதுவாவே, மழைபேய்ஞ்சுதுன்னா எங்காவது மலங்காட்டு பக்கமா போறது நம்ம வழக்கம்ங்க, சரி.. ஒரு வாரமா மழை கொட்டிட்டு இருக்குதுன்னு, நம்ம சகா மூணு பேர் சேர்ந்து ஒரு நாள் பரம்பிக்குளம் வரைக்கும் போயிருநதம்ங்க், அதுல ஒருத்தன் அவனோட ரெண்டரை வயசு 'நேத்ரா'வயும் எடுத்துட்டு வந்துட்டான் ('நேத்ரா'வோட அம்மா அவுங்கப்பாவ கண்காணிக்கா செஞ்ச ஏற்ப்பாடு அது! :-)). டாப்ஸ்லிப்ல இருந்து பரம்பிக்குளம் போற வழியில கொஞ்சம் ரோட்ட விட்டு ஒதுங்கி ஒரு கி.மி. நடந்தா ஒரு ஓடை வரும்ங்க, அங்க போயி ஓடுற தண்ணியில, 'தண்ணி'யோட கொஞ்ச நேரம் ஆடிட்டு, அப்படியே கொஞ்ச நேரம் பாட்டு கேட்டுட்டு படுத்துகிடந்துட்டு வந்தோம். சரி, இவ்வளவு தூரம் சின்ன குழந்தைய எடுத்துட்டு வந்துட்டோம் யானை சவாரி செய்ய வைப்போம்னு ஆசைப்பட்டு, டாப்ஸ்லிப்ல இருக்குற 'கூப்'புக்கு போனோம்ங்க. (சூரியன் படத்துல மொட்டை சரத் வேலை செய்யிற 'கூப்', ஆனா அது கூப்'புகார கவுண்டருது கிடையாதுங்க, கவருமெண்ட் 'கூப்').

யானை மேல ஏத்தி விடுற வரைக்கும், குஷியா இருந்த 'நேத்ரா', யானை நகர ஆரம்பிச்சதும் ஒரே ஆழுகை ஆர்ப்பாட்டம்ங்க, என்னடா இவ்வளவு நேரம் 'யானை, யானை, யானை மேல போறேன்'னு குஷியா இருந்த குழந்தை இப்படி அழுகுதேன்னு நமக்கும் கஷ்டமா போச்சுங்க. அப்புறம் என்ன செய்யறது, சீக்கிரமா எறக்கிவிட்டு, (இருந்தாலும் நம்ம் வீம்புக்காக, ஒரு சுத்து சுத்த விட்டுடனுங்க) அவளுக்கு புடிச்ச alpenlebe லாலிப்பாப் குடுத்து சமாதனபடுத்துனோம்.
அழுகை எல்லாம் சமாதனமானதுக்கப்புறம், 'ஷேம், ஷேம், என்ன இப்படி பயப்படுற நீ'ன்னு சும்மா வம்பிழுத்தனுங்க, அதுக்கு அவ ஒரு பதில் சொன்னா பாருங்க 'நான் ஒன்னும் பயந்துட்டு அழுல, என்னை இறக்கி விடாதீங்கன்னு தான் அழுதேன், நீங்க தான் என்னை சீக்கிரம் எறக்கி விட்டுடீங்க'ன்னு.. நான் அப்படியே ஆடிப்போயிட்டனுங்க. ம்.ம். இந்த புள்ளைக எல்லாம் வயசு வந்தா.. சாமி கஷ்டம் தான்.. கம்முன்னு சொல்றத கேட்டுகிட்ட போயிடனும். எல்லாம் நேரம்.. பொதுவா என் சகா கொஞ்சம் அமைதியான ஆளு அவன்புள்ளயே இவ்வளவு பேசுதுன்னா, நமக்கு நாளைக்கு ஒரு காரியம் ஆகி, நமக்கு ஒன்னு வந்து பொறந்து.. அய்யா..!! இவ்வளவு காலம் தான் இப்படி பெத்தவங்க பேச்ச கேட்டே போச்சுன்னா, இனி வர்ற காலமும் இப்படி பெத்ததுக பேச்ச கேட்டே போயிரும் போல இருக்குதுங்க..
வரும் போது கார்ல சகாகிட்ட "நங்கை உன்னை பார்த்துக்க ரெண்டரை வயசு புள்ளைய அனுப்புதேன்னு நினைச்சேன், ஆனா அதுல ஒன்னும் தப்பபில்ல பங்காளி, அடுத்த தடவை இந்த தப்ப செஞ்சிராத'ன்னு ஒரு எச்சரிக்கை குடுத்தேன், சரிதானுங்க!?

1 comment:

Pavals said...

test