Sunday, July 10, 2005

sms siரிப்பு

ஏற்க்கனவே எனக்கு வந்த ஒரு sms பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேன், அதை படிச்சுட்டு நம்ம வலை வாழ் தமிழர்கள் எல்லாரும் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தனும்னு ஆசைப்பட்டாங்க, நான் தான் அப்ப கொஞ்சம் வேலையா இருந்ததால, இப்ப டயமில்லை பிற்காலத்துல பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன், சரி அது பழைய கதை, விடுங்க..
இந்த தடவை, மறுபடியும் அதே மாதிரி ஒரு பதிவு. படிச்சு பார்த்து சிரிப்பு வந்தா சிரிங்க.. எனக்கு சிரிப்பு வந்துச்சு, உங்களுக்கும் சிரிப்பு வரலைன்னா என்ன கோவிச்சுக்காதீங்க.. :-(

--
குடும்பத்துல பிரச்சனையா??
'மெட்டிஒலி' பாரு
அண்ணன் தம்பிக்குள்ளார பிரச்சனையா??
'ஆனந்தம்' பாரு
புருஷம் பொஞ்சாதிக்குள்ளார பிரச்சனையா??
'கணவருக்காக' பாரு
நீங்க சைட் அடிக்கிற பொண்ணுகூட பிரச்சனையா??
அப்போ அவ தங்கச்சிய பாரு
--
(சிரிப்பு வந்துச்சா??)

'மெட்டிஒலி', 'ஆனந்தம்','கணவருக்காக'.. இதெல்லாம் என்னன்னு கேட்டீங்கன்னா.. வேண்டாம், கேக்க மாட்டீங்க..
'தமிழர் இருக்குமிடமெல்லாம் தமிழ் சீரியல்களும் இருக்கும்'னு யாரோ 'ஸ்ரீ ஸ்ரீ சீரியலாணந்தா'ன்னு ஒரு மகாகுரு சொல்லியிருக்காராம், ஊருக்குள்ளார சொன்னாங்க..

அப்புறம், இந்த smsக்கும் நான் முன்ன ஒரு நாள் சொன்ன 'கவிதை'(?)க்கும் எதோ விட்டகுறை தொட்டகுறை இருக்கிற மாதிரி தோணுச்சு, ...ஒரு வேளை அதுனால தான் எனக்கு இது புடிச்சிருக்கோ என்னவோ ?

--
#105

3 comments:

பத்ம ப்ரியா said...

Hi Raasu

Great..u r having excellent sense of humour. Today, accidentally i had read ur kaathal kaditham (!!!?)(unga pathivuthaan..) and pathil kaditham by viji.. great.. enna solrathunnee theriyala.. vizhunthu vizhunthu sirichcheen.. Romba joviyalaa ezhuthareenga.. continu your writtings. This present poem also too good.
M. padmapriya

Chez said...

Hmm நல்லா சிரிச்சேன்.. :-) இந்த மாதிரி sms jokes கேட்டு மாசக் கணக்குல ஆச்சு!

ILA (a) இளா said...

அன்னிக்கு எழுதினப்போ நல்லா இருந்து இருக்கும்.இப்போ எப்படிங்க ராசா?