Thursday, September 6, 2007

நிலவு


பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது
பூங்காற்றும் தூங்காது
வா வா வா

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு

பூவிலே ஒரு பாய் போட்டு
பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல்
பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம்
மனசில் ஒரு கோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத சாபம்
தனிமையே போ
இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு


காவலில் நிலை கொள்ளாமல்
தாவுதே மனது
காரணம் துணையில்லாமல்
வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும்
அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்
விரகமே ஓ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப் போது
பூங்காற்றும் தூங்காது
வா வா வா

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு

--

மேல போட்டிருக்கிற 'நிலா' படம் நம்ம வூட்டம்மிணி போன வாரம் எடுத்தது.. கீழ போட்டிருக்கிற பாட்டு 1986'ல மெளனராகம் படத்துக்கு கவிஞர் வாலி எழுதினது :)


நீ என்ன செஞ்சேன்னு கேக்கிறவங்களுக்கு.. 'கேமிரா வாங்கி குடுத்திருக்கேன்.. இப்போ பதிவு போட்டிருக்கேன்' பத்தாதா?

--
#244

No comments: